நெல் வயலில் மந்திரம் ஓதினால் விளைச்சல் அமோகமாக இருக்கும்: அமைச்சர் சர்ச்சை பேச்சு
Recommended Video
பனாஜி: வயல்களில் மந்திரம் ஓதினால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று கோவா மாநில விவசாயத் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்தில் விவசாயத் துறை அமைச்சராக இருப்பவர் கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய்.
ஷிவ் யோக் பவுன்டேஷன் என்ற அமைப்பு உருவாக்கிய அண்டவெளி விவசாய திட்டத்தை படோர்டாவில் இருக்கும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயலில் அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அதன் பிறகு அவர் கூறியதாவது,
விளைச்சலை அதிகரிக்கும் நோக்கத்துடன் அண்டவெளி விவசாயத்தை மாநில அரசு ஊக்குவிக்கும். அண்டவெளி விவசாய முறை மூலம் ரசாயன உரங்கள் கலக்காத பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைக்கும். இந்த முறைப்படி நெற் கதிர்கள் மீது ரசாயனம் தெளிப்பது இல்லை. இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
Launched transplanting of Ratnagiri 7 RedRice at #ShivYogKrishi’s maiden #CosmicFarming rice cultivation @#Fatorda today .Not tokenism but increasing fallow uncultivated area from 40,700 ha(27600 ha Kharif & 13100 ha Rabi) under rice @Goa is the real challenge ! #FarmingChallenge pic.twitter.com/EoKcTS1h0q
— Vijai Sardesai (@VijaiSardesai) July 3, 2018
விளைச்சல் அதிகரிக்க விவசாயிகள் வயலில் நின்று 30 நிமிடங்கள் மந்திரம் ஓத வேண்டும். அப்படி மந்திரம் ஓதினால் அண்டவெளி சக்தி நெற்பயிற்கள் மீது அதிக அளவில் பாயும். பொது வாழ்வில் இருக்கும் அனைவரும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.