For Daily Alerts
Just In
சென்னை புறநகரில் ரயில் சேவை பாதிப்பு... மின்கம்பி அறுந்து விழுந்ததால் பாதி வழியில் நிற்கும் ரயில்கள்
சென்னை புறநகர் ரயில் செல்லும் தடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகரில் மின்கம்பி அறுந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி வழியாக சென்னைக்கு புறநகர் ரயில் மற்றும் பயணிகள் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகரில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.
உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி வழியாக சென்னைக்கு வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் இருந்து பெங்களூரு வந்த ரயிலும் நடுவழியில் நிற்பதாக தெரிகிறது.
Comments
English summary
Chennai suburban and express trains service interupted due to electric wire cut down near Thiruvallur.
Story first published: Monday, September 25, 2017, 14:42 [IST]