For Daily Alerts
Just In
மழையால் பாதித்த விவசாயிக்கு ரூ.23 காசோலை அளித்து கடுப்பேற்றிய உ.பி அரசு
டெல்லி: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு 23 ரூபாய் மதிப்புள்ள காசோலையை நிவாரணமாக உத்தரப்பிரதேச அரசு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் பெய்த பலத்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் நீர் தேங்கி, விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், நரைனி மாவட்டத்தைச் சேர்ந்த சுக்ராணி என்ற மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, உ.பி அரசு சார்பில் மழை நிவாரணமாக ரூ.23க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Cheque for Rs.23 given to the farmer by Utterpradesh state government.
Story first published: Tuesday, January 5, 2016, 8:56 [IST]