For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: எல்லை பாதுகாப்பு படையினர் 3 பேர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

Maoists
சுக்மா: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் எச்சரிக்கையையும் மீறி பலத்த பாதுகாப்புடன் 70% பேர் வாக்களித்ததனர்.

வாக்குப் பதிவின் போது நேற்று பல இடங்களில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர் .இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பலியானார். இந்நிலையில் இன்றும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

எல்லை பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
3 jawans killed after Maoists attack BSF convoy in Sukma, Chhattisgarh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X