For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையே மோதல்- சரமாரி துப்பாக்கிச் சூடு- 6 பேர் பலி

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையேயான சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்க இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை வீரர்களும் முகாமிட்டுள்ளனர். சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சக வீரர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

Chhattisgarh: 6 ITBP Jawans Killed As Colleague Opens Fire

இதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இதனால் சக வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இம்மோதலில் மொத்தம் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரரும் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

English summary
According to the Police Officials, 6 ITBP Jawans Killed As Colleague Opens Fire In Chhattisgarh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X