கொரோனா வைரஸ் அச்சம்: சத்தீஸ்கர், மத்திய பிரதேசததில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
போபால்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 44 பேர் கொரோனா அறிகுறியுடன் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனையில் சத்தீஸ்கரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. எனினும் சத்தீஸ்கரில் கொரோனா பரவும் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரளா மற்றும் டெல்லி மாநிலங்களில் பள்ளிகளுகக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள், மால்கள் மற்றும் வணிக வளாகங்களை மூடுவதற்கு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவும் வேகமாக அதிகமாக உள்ளது. இதுவரை 81 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடாவில் 76 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார். இவர் தான் இந்தியாவில் கொரோனாவால் இறந்த முதல் இந்தியர் ஆவார்.