For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டீஸ்கர் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவரை சொந்த கட்சியினரே அடித்து, உதைத்த பரிதாபம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சட்டிஸ்கர் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மார்கண்டேயாவை அக்கட்சியின் தொண்டர்களே அடித்து உதைத்து தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு கட்சியின் மாநில தலைவர் மார்கண்டேயாவிடம் பலரும் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு வாய்ப்பு தரப்பட்டது, பலர் ஏமாற்றமடைந்தனர்.

Chhattisgarh BSP leader Margandeya beaten up by his own party men

சீட் கிடைக்காத கோபத்தில், அக்கட்சியினரே மார்கண்டேயாவை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். கட்சி அலுவலகத்தில் தொடங்கி, நடுத்தெரு வரை தரதரவென இழுத்து வந்து, எட்டி உதைத்தனர்.

இதுகுறித்து, அக்கட்சியின் நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Chhattisgarh BSP leader Margandeya was beaten up by his own party men for denying ticket to contest the local body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X