For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவோயிஸ்டுகளுக்கு பொருட்கள் சப்ளை- சத்தீஸ்கர் பாஜக பிரமுகர் கைது

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 10 ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு பொருட்களை சப்ளை செய்து வந்த பாஜக பிரமுகரை அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சத்தீஸ்கரின் தண்டேவடா- பஸ்தார் வனப்பகுதிதான் மாவோயிஸ்டுகளின் கோட்டை. இங்கு பழங்குடி மக்களின் உதவியுடன் கோலோச்சி வருகின்றனர் மாவோயிஸ்டுகள்.

Chhattisgarh police arrest BJP leader for supplying tractor to Maoists

இவர்களை ஒடுக்க போலீசாரும் துணை ராணுவத்தினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் மாவோயிஸ்டுகளின் கொட்டம் ஒடுங்கியபாடில்லை.

மாவோயிஸ்டுகளுக்கு உதவுகிறார் என்ற சந்தேகத்தின் பேரில் தண்டேவடா மாவட்ட பாஜக துணைத் தலைவரான ஜகத் பூஜாரியை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனர் போலீஸ். இந்த நிலையில் ஜகத் பூஜாரியின் கூட்டாளி உசேந்தி புதிய டிராக்டருடன் மாவோயிஸ்டுகள் தளபதியை சந்திக்க சென்ற போது சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாவோயிஸ்டுகளுக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது பாஜகவின் ஜகத் பூஜாரி என தெரியவந்தது.

மருத்துவமனையில் 62 நாட்கள்.. 181 பக்கங்களில் மருத்துவமனையில் 62 நாட்கள்.. 181 பக்கங்களில் "பில்"..கொரோனாவிலிருந்து மீண்ட முதியவருக்கு பேரதிர்ச்சி

இது தொடர்பாக தண்டேவடா காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் கூறியதாவது: மாவோயிஸ்டுகள் தங்களுக்கு டிராக்டர் வேண்டும் என கூறியுள்ளனர். ஜகத் பூஜாரி தம்முடைய பெயரில் வாங்கினால் போலீசார் பிடித்துவிடுவர் என கூறி மற்றொரு நபர் பெயரில் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த டிராக்டரைத்தான் மாவோயிஸ்டுகளிடம் ஒப்படைக்கும் போது கூட்டாளி சிக்கினார். ஜகத் பூஜாரி 10 ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்து வருகிறார் என்றார்.

English summary
Chhattisgarh police arrested a Local BJP leader for supplying tractor to Maoists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X