லலித் மோடி விவகாரம்...யார் சொல்வது உண்மை? சுஷ்மாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி
டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சொல்வது உண்மையா? பிரிட்டன் தூதர் சொல்வது உண்மையா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பயண ஆவணங்களை பெற எந்த உதவியும் செய்யவில்லை என்று நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் தாம் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புவதாக ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையீடு குறித்து இந்த விஷயத்தில் மூன்று வெவ்வேறு கூற்றுகள் உள்ளன.
Who is speaking the truth? British High Commissioner Bevan or Keith Vaz MP or Minister Sushma Swaraj? (2/2) #LalitModi
— P. Chidambaram (@PChidambaram_IN) August 7, 2015
பிரிட்டிஷ் துணை தூதர் ஜேம்ஸ் பேவன் அல்லது பிரிட்டிஷ் தூதர் கெய்த் வாஸ் அல்லது சுஷ்மா சுவராஜ் இவர்கள் மூவரில் உண்மையை சொல்வது யார்? என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.