#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்
Recommended Video
சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓவர் நைட்டில் நாடு முழுக்க பரபரப்பான பேசு பொருளாகி விட்டார். அவரைக் கைது செய்ய சிபிஐ மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என கெடு விதிக்கப்பட்டதால் பரபரப்பு கூடியுள்ளது.
மறுபக்கம் #ChidambaramMissing என்ற பெயரில் ஒரு குரூப் பரபரப்பைக் கூட்டி வருகிறது டிவிட்டரில். சிதம்பரம் மாயம் என்று இந்த ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது. இதை வைரலாக்கி வருவோர் யார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பாஜகவினரும், ப.சிதம்பரம் எதிர்ப்பாளர்களும்தான் இதை மாய்ந்து மாய்ந்து வைரலாக்கிக் கொண்டுள்ளனர்.
|
ட்வீட்
ப.சிதம்பரத்தைக் காணவில்லை. அவரை எங்காவது கண்டால் சொல்லவும் என்று இவர் சொல்லி டிவீட் போட்டுள்ளார். இதே போலத்தான் பலரும் டிவீட் போட்டுக் கொண்டுள்ளனர்.
|
பேஸ்ஆப்
இவர் மேலும் ஒரு படி போய் பேஸ் ஆப் மூலமாக ப.சிதம்பரம் படத்தை விதம் விதமாக மாற்றி அதைப் போட்டுள்ளார்.
|
அட்வைஸ்
ப.சிதம்பரம் ஓடி ஒளியவில்லை. நிச்சயம் அவர் விசாரணைக்கு வருவார். உங்களது உளறல்களை நிறுத்துங்கள் என்று இவர் அர்னாபுக்கு காட்டமான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
|
இதுதான் கதி
இவர் சுப்பிரமணியம் சாமிக்கு நன்றி கூறி, யாரும் இவரிடம் விளையாடாதீர்கள். விளையாடினால் இதுதான் கதி என்று கூறியுள்ளார்.
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள். இப்போது எல்லாவற்றையும் மறக்கடிக்க ப.சிதம்பரத்தை கையில் எடுத்தாச்சு போல. எப்ப இது ஓயும் என்று தெரியவில்லை.