For Daily Alerts
Just In
திருப்பதியில் வேண்டிக்கொண்டதால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது.. எடப்பாடியார் மகிழ்ச்சி!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று குடும்பத்துடன் திருப்பதி சென்றார். இதைத்தொடர்ந்து இன்று காலை குடும்பத்துடன் அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த முறை திருப்பதி வந்தபோது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியது என்றார். அப்போது தமிழகத்தில் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த முறை தமிழகத்தில் மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார். நேற்றுதான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
edappadi palanisamy cm thirupathi temple drought rain tn முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி கோயில் வறட்சி மழை தமிழகம்
English summary
Chief minister Edappadi Palanisami visited Tirupati temple. He said that he is happy that his prayers have come true.