For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவியை தக்க வைக்க திருப்பதிக்கு போன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- வீடியோ

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்காகச் சென்றார். அவருக்காக சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

By Suganthi
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்றார். அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

 Chief minister Edappadi Palanisamy visted Tirupati venketeshwara temple

மேலும், கோயிலில் அவருக்கு தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, முதன்முதலாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

ஏற்கனவே முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்ள யாக பூஜைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீர் திருப்பதி தரிசனம், முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவதற்காக செய்யப்பப்ட்ட நேர்த்திக்கடனா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மதுரையில் முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்தில், தொண்டர்கள் இல்லாமல் பெரும்பலான நாற்காலிகள் காலியாக இருந்தன. ஏற்கனவே சேலத்தில் முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்திலும் பொதுமக்களும் தொண்டர்களும் அதிக அளவில் கலந்துகொள்ளவில்லை. இது முதல்வருக்கு மக்கள் மத்தியிலிருக்கும் எதிர்ப்பையே காட்டுகிறது.

இந்த சூழ்நிலையில் குடும்பத்துடன் முதல்வர் மேற்கொண்ட திருப்பதி ஏழுமலையான் தரிசனம் பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.

English summary
Tamilnadu chief minister Edappadi Palanisamy visted Tirupati venketeshwara temple with his family. Tirupati devasdhana officials gave warm welcome to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X