குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகம்.. மகாராஷ்டிரத்தில் 5 பேர் அடித்துக் கொலை
மகாராஷ்டிரத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
மும்பை: மகாராஷ்டிரத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
இந்த வருட தொடக்கத்தில்தான் அந்த வாட்ஸ் ஆப் மெசேஜ் வலம் வர தொடங்கியது. உங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது, பாதுகாப்பாக இருங்கள் என்று பரவியது.மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான இந்த வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 23 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் எல்லா இத பொய்யான தகவல் சென்றுள்ளது. தமிழகத்தில் வதந்தி காரணமாக திருவண்ணாமலையில் ருக்மணி என்ற மூதாட்டியும், திருவள்ளூரில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வதந்தி காரணமாக மகாராஷ்டிரத்தில் துல மாவட்டம் ரயின்பாதா கிராமத்தில் 5 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இவர்கள் ஐந்து பெறும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இந்த கொலையில் ஈடுபட்ட மக்கள் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அங்கு சுற்றுலா சென்றவர்கள் என்பதும், குழந்தை கடத்தல் கும்பல் இல்லை என்பதும் முத்தாகிட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.