நேரு பிறந்தநாளையொட்டி குழந்தைகளிடையே மத்திய அரசின் தேசிய சிறார் தூய்மை திட்டம் தொடக்கம்
டெல்லி: ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு தேசிய சிறார் தூய்மை திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதியன்று தேசிய அளவில் தூய்மைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றுள்ள வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தைகள் தினமான நேருவின் 125வது பிறந்த நாளான இன்று தேசிய அளவிலான சிறார் தூய்மைத் திட்டம் (நேஷனல் பால் ஸ்வாச்சா) இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய சிறார் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இதனை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய அவர், தேசிய தூய்மைத் திட்டத்தில் சிறார்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர்கள்தான் தூய்மை திட்டத்தின் தூதர்களாக தங்கள்து வீடு, பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் செயல்பட முடியும்" என்றார்.
மேலும் சிறார்களுக்கு அவர்களுக்கான புரிதல் முறைகளின் வழியே தூய்மை குறித்து கற்பிக்க வேண்டியதும் அவசியம் என்றார்.
தேசிய சிறார் தூய்மைத் திட்டமானது இன்று முதல் வரும் 19-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட இருக்கிறது.