1,000 கி.மீ கால்வாய் அமைத்து பிரம்மபுத்திராவை திசைமாற்றிவிடுகிறதா சீனா?
பிரம்மபுத்திரா நதிநீரை திசைதிருப்ப 1,000 கி.மீ கால்வாயை சீனா வெட்டுவதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியது.
டெல்லி: பிரம்மபுத்திராவை திசை மாற்றுவதற்காக 1,000 கி.மீ தொலைவுக்கு கால்வாயை சீனா வெட்டுவதாக வெளியான தகவலால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஹாங்ஹாங்கில் இருந்து வெளியாகும் செளத் சைனா மார்னிங் போஸ்ட்டில், சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தின் தண்ணீர் தேவைக்காக திபெத்தில் இருந்து 1,000 கி.மீ கால்வாய் வெட்ட சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது இந்தியா- சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
அண்மையில்தான் டோக்லாம் எல்லை பிரச்சனை தீர்ந்தது. இந்த நிலையில் பிரம்மபுத்திராவை திசைமாற்றிவிடும் வகையில் சீனா கால்வாய் வெட்டுவதாக செய்திகள் வெளியானது இருதரப்பு உறவு மீண்டும் சிக்கலானாது.
ஆனால் சீனாவோ இதை உடனடியாக மறுத்துள்ளது. இப்படியான ஒரு திட்டமே தங்களிடம் இல்லை என்றும் ஹாங்ஹாங் பத்திரிகை பொய்யான செய்தி வெளியிட்டுள்ளது எனவும் சீனா விளக்கம் அளித்திருக்கிறது.