For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவிக்கப்பட்ட 10 ஜாகுவார் போர் விமானங்கள்.. அந்தமானில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

அந்தமான்: அந்தமான் நிகோபார் பகுதியில் தற்போது இந்திய விமானப்படை சார்பாக 10 ஜாக்குவர் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Andaman பகுதிக்கு விமான படை கொண்டு சென்ற Jaguar Flights

    கடந்த இரண்டு நாட்களாக இந்திய பாதுகாப்பு படை அந்தமான் நிக்கோபார் பகுதியில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அங்கு இந்திய கடற்படை தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று முதல்நாள் அங்கு இந்தியா சார்பாக ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்தியாவின் போர் கப்பல்கள் 4க்கும் அதிகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டது. அதோடு இந்த போர் கப்பல்கள் சேர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

    புதிய கொரோனா எங்கிருந்து வந்தது.. திடீரென ஸ்பைக்.. ஆடிப்போன சீனா.. 'போர்க்கால நிலைமை' என அறிவிப்புபுதிய கொரோனா எங்கிருந்து வந்தது.. திடீரென ஸ்பைக்.. ஆடிப்போன சீனா.. 'போர்க்கால நிலைமை' என அறிவிப்பு

    நடந்தது என்ன

    நடந்தது என்ன

    இந்த நிலையில் தற்போது அந்தமான் நிக்கோபார் பகுதியில் இந்திய விமானப்படை சார்பாக 10 ஜாக்குவர் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. SEPECAT எனப்படும் பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட போர் விமானங்களை இந்தியா அங்கே குவித்து வருகிறது. வான்வெளி சண்டைக்கு ஏற்ற இந்த விமானங்கள் அங்கே குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விமானங்கள் அங்கு தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஏவுகணைகள் எப்படி

    ஏவுகணைகள் எப்படி

    அதேபோல் இங்கே இந்தியா ஏவுகணைகளை இறக்கி உள்ளது. இந்தியாவின் ஹர்பூன் வகை ஏவுகணைகள் அங்கே களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகும். போர் கப்பல்களை தாக்குதவற்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது ஆகும் இது. இந்தியா அந்தமான் கடல் பகுதியில் தற்போது இதை களமிறக்கி உள்ளது.

    அமெரிக்கா எப்படி

    அமெரிக்கா எப்படி

    அந்தமான் எல்லையில் இந்தியாவுடன் அமெரிக்காவும் சேர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று இன்றுதான் தகவல் வெளியானது. இதற்காக அமெரிக்காவின் போர் கப்பல்கள் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டது என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் நிமிட்ஸ் போர் கப்பல் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபடும் என்கிறார்கள். இது உலகிலேயே பெரிய அணு ஆயுத கப்பல் ஆகும்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அந்தமானில் திடீரென இரண்டு நாட்களாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில் இப்படி பாதுகாப்பு அதிகரிக்கப்படுத்துவதாக கூறுகிறார்கள். அங்கே சீனா எதுவும் செய்து விட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இப்படி செயல்படுவதாக கூறுகிறார்கள்.

    English summary
    China standoff with India: IAF deploys Jaguar flights in Andaman Nicobar for Training.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X