அடிபணிந்த சீனா.. எல்லையில் திடீரென பின்வாங்கியது ஏன்? சீன வெளியுறவுத்துறை கொடுத்த விளக்கம்!
லடாக்: லடாக்கில் திடீரென சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியது குறித்து தற்போது அந்த நாட்டின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் சீனா தனது படைகளை திடீரென வாபஸ் வாங்கி உள்ளது. யாரும் நினைத்து பார்க்க முடியாத நேரத்தில் கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்த பேச்சுவார்த்தைதான் இதற்கு காரணம்ஆகும். இவர்கள் வீடியோ கால் மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இந்த மாற்றம் நடந்துள்ளது.
நடிகர் பார்த்திபன் குரலில் வீழ்வேனென்று நினைத்தாயோ! மீண்டு வருவேன்- நான் சென்னை- அசத்தல் வீடியோ
சீனா அறிக்கை
இந்த நிலையில் இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா சீனா இடையே கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த ஜூன் 30ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதே இரண்டு நாட்டு தரப்பும் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடிவு செய்தது. இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி செல்வதற்கு ஒப்புக்கொண்டது.
என்ன விஷயம்
முக்கியமாக அதற்கு முன் செய்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. எல்லையில் இருக்கும் படைகள் பதற்றத்தை தணிக்க முன் வர வேண்டும். இது தொடர்பாக நிறைய வரையறைகள் இரண்டு தரப்பிலும் விதிக்கப்பட்டது. எல்லையில் இருக்கும் படைகள் இரண்டு பக்கமும் வாபஸ் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது எல்லையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
என்ன மகிழ்ச்சி
இந்த மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா சீனாவை நோக்கி ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்று நம்புகிறோம். ஆக்கபூர்வமான பணிகளை இந்தியா எல்லையில் மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். இரண்டு நாட்டு தரப்பும் இதற்கு முன்பு இருந்த நிலைக்கு செல்லும் என்று விரும்புகிறோம். வழக்கில் இருக்கும் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி பேச்சுவார்த்தைகளை செய்ய வேண்டும்.
பேச்சுவார்த்தை
ராஜாங்க முறைப்படி இரண்டு நாட்டு தரப்பும் பேச வேண்டும். இதன் மூலமே எல்லை பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும். தற்போது எல்லையில் நடக்கும் மாற்றங்களை சீனா வரவேற்கிறது. சீனாவின் குறிக்கோளை போலவே இந்தியாவும் அதே குறிக்கோளோடும் செயல்படும் என்று நம்புகிறோம். எங்கள் எல்லையை பாதுகாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சீனாவின் எல்லை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம், என்று சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.