For Daily Alerts
Just In
சாலையின் நடுவே அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 24 பயணிகள்...
இடாநகர் : அசாம் மாநிலத்தில் 19 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பவன் ஹன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நாகர்லகுனில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதில் 19 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் என 24 பேர் பயணம் செய்தனர்.
அசாம்-அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள்ள இடாநகரை இணைக்கும் கோஹ்பூர் பாலிஜன் என்ற இடத்தில் சென்றபோது மோசமான வானிலை நிலவியதால் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, இடாநகர்-கோஹ்பூர் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடிய மக்கள் ஹெலிகாப்டரை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
Comments
English summary
A Pawan Hans helicopter, en route from Itanagar to Guwahati, made an emergency landing on a concrete road at Gohpur in northern Assam.
Story first published: Wednesday, July 15, 2015, 1:21 [IST]