பட்ஜெட் ஓகே.. எது விலை குறையும்.. எது கூடப் போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்?
மத்திய பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரி விதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பல பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி: பொது பட்ஜெட் வரி விதிப்பு மாற்றத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகரெட், புகையிலை உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயரும் என தெரிகிறது. அதேபோல் பல பொருட்களின் விலை குறையும் என்றும் கூறப்படுகிறது.
பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் முதன்முறையாக ஒருங்கிணைத்து இன்று நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.
வரிவிதிப்பு மாற்றத்துடன் பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. இதானல் விலை உயரும் மற்றும் குறையும் பொருட்கள் எவை எவை என்பதைப் பார்ப்போம்...
உடலுக்கு கேடு விளைவிப்பவையான சிகரெட்டு, பான்மசாலா, புகையிலை போன்றவற்றின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும். அதேசமயம், சோலார் மின்தகடுகள், எரிபொருள் கலன்கொண்ட மின் உற்பத்தி அமைப்புகள், காற்றின்மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டர் ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயரும் பொருட்கள்
சிகரெட்டுகள், பான் மசாலா, சிகார், சுருட்டுகள், பீடிகள், மெல்லும் புகையிலை, எல்.இ.டி. விளக்கு உதிரிபாகங்கள், வறுத்த மற்றும் உப்புபோடப்பட்ட முந்திரி, கண்ணாடி இழைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலிமர் பூசிய எம்.எஸ்.டேப்கள், அலுமினியம் தாதுக்கள், வெள்ளி நாணயங்கள்-பதக்கங்கள், செல்போன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும என கூறப்படுகிறது.
விலை குறையும் பொருட்கள்:
திரவ இயற்கை எரிவாயு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் சுத்திகரிப்பான் வடிகட்டி, சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், எரிபொருள் செல் சார்ந்த மின் உற்பத்தி அமைப்புகள், காற்று மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டர், பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் கைரேகை பதிவு எந்திரம், ராணுவத்தினருக்கான குழு காப்பீடு ஆகியவை வெகுவாக குறையும் என தெரிகிறது.