சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது: மத்திய அரசு
டெல்லி: சுதந்திர தினத்திற்கு, பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் 72வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டின் 72வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம்.
அதற்கு பதிலாக காகித்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.