For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டம்.. என்ன நடந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.. முடிந்ததை பாருங்கள்.. மமதா சவால்!

குடியுரிமை சட்ட திருத்தத்தை என்ன நடந்தாலும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்தத்தை என்ன நடந்தாலும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது மேற்கு வங்க முதல்வரும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புள்ளீங்கோ பற்றிய படம் சுசீந்திரனின் சாம்பியன்!புள்ளீங்கோ பற்றிய படம் சுசீந்திரனின் சாம்பியன்!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, என்ன நடந்தாலும் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அனுமதிக்க மாட்டோம். என்ஆர்சி சட்டத்தையும் எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மட்டோம். வடகிழக்கு மாநிலங்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

காவி கட்சி

காவி கட்சி

காவி கட்சி நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது. அவர்களால் எங்கள் மாநிலத்தை துண்டு போட முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு மாநில நலன்தான் முக்கியம். பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேறி இருக்கலாம்.

எங்கள் மாநிலம்

எங்கள் மாநிலம்

ஆனால் எங்கள் மாநிலத்திற்கு இதை அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எங்கள் நாட்டில் மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் .

திரிணாமுல்

திரிணாமுல்

இந்த சட்டத்திற்கு எதிராக திரிணாமுல் கட்சி போராட்டம் நடத்தும். வரும் 16-18 தேதிகளில் மாநிலம் முழுக்க நாங்கள் போராட்டம் நடத்துவோம். இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் இப்படி மக்களை பிரித்து மோசமாக ஆட்சி நடத்துவீர்கள், என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Citizenship Amendment: We won't allow the law in our state says, Mamata Banerjee in Kolkata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X