10வது வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த டீச்சர்... 13 வயது மாணவி கேங் ரேப்.. இது பதன்கோட்டில்!
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10வது வகுப்பு மாணவியை அவரது டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதேபோல அதே பஞ்சாபின் பதன்கோட்டில், 13 வயது மாணவியை ஐந்து பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து சீரழித்துள்ளனர்.
10வது வகுப்பு மாணவி பலாத்கார விவகாரத்தில் அவரது ஆசிரியர் பங்கஜ் அரோரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளா். இவர் நல்ல மதிப்பெண் பெற என்னிடம் டியூஷன் படி என்று கூறி அந்த ஆசிரியர் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் மாணவியை அலங்கோலமான நிலையில் வீடியோவிலும் படம் பிடித்துள்ளார் அரோரா. அதை வைத்து மிரட்டி பலமுறை பலாத்காரமும் செய்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, பதன்கோட் நகரில் 13 வயது மாணவியை ஐந்து பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இதுதொடர்பாக வருண் குமார், அர்ஜூன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவி 8வது வகுப்பு படித்து வருகிறார். அவரை பலாத்காரம் செய்த ஐந்து பேருமே மாணவியின் நண்பர்களாம்.
இவர்களும் மாணவியை வீடியோவில் படம் பிடித்து அதைக் காட்டி மிரட்டி, வீட்டிலிருந்து தங்க நகை, பணம் உள்ளிட்டவற்றையும் ஐந்து பேரும் பறித்துள்ளனர்.