அஸ்ஸாம் : 5ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக்கொலை - மூவர் கைது
அஸ்ஸாம் மாநிலத்தில் 10 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துள்ளனர்.
திஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நாகன் மாவட்டத்தில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 5 பேர்
கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்தார்.
10 வயதான அந்த சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 5 கொடூர மிருகங்கள் அந்த சிறுமியை வேட்டையாடியுள்ளனர்.
இந்த விஷயம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த சிறுமி மீது மண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
ஆபத்தான நிலையிலும் தனது நிலைமைக்கு காரணமான 4 குற்றவாளிகள் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பெயர் ஜாகிர், ஹுசேன், ராகுல், அம்தாதுல் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 2 பேர் 10, 11 வயதுடைய சிறுவர்கள் என்பதுதான் கொடுமை.
இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் அறிந்த ஜாகிர் ஹுசைன் தலைமறைவாகிவிட்டான். தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில்
குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புகொண்டனர்.
பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாகவும், ஜாகீர், உசேன் இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுவர்கள் அப்போது அவனுடன் இணைந்து கொண்டதாகவும் பின்னர் தீவைத்தாகவும் கூறினர். முன்விரோதம் காரணமாக இந்த பலாத்காரம் கொலை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.
அசாம் மாநிலத்தில் மட்டும் கடந்தாண்டு 3009 பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும். பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை தொடர்பாக 106 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திர மோகன் பட்டோவரி தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாகோன் மாவட்டம் சபார்முக் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 35 வயது பெண் ஒருவர், அவரது கணவன் கண் முன்னே 8 நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.