பள்ளிக்கு லீவு விட்டுவிட்டு (வேறு பள்ளி) ஹெச்.எம்.முடன் ஜாலியாக இருந்த தலைமை ஆசிரியர்
மீரட்: உத்தர பிரதேசத்தில் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டு வேறு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது இளம் தலைமை ஆசிரியரின் காதலியான மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியை வந்துள்ளார். உடனே தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
மாணவர்கள் கிளம்பிய பிறகு அவர் ஒரு அறையில் காதலியுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்துள்ளார். இதற்கிடையே சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கு எதற்கு விடுமுறை விட்டார்கள் என்று நினைத்து சில பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியரின் காதல் லீலைகளை பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து காதல் ஜோடியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து கல்வித் துறை அதிகாரி ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோர் புதன்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர் என்றார்.
தான் வேறு ஒரு ஆசிரியரை சந்திக்க வந்ததாக தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.