9ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் கைது... உ.பி.யில்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவியைக் கடத்திப் பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேசம் லோனி போலீஸ் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 9ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர்கள் இருவர் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் மயக்க மருந்து கலந்த பானத்தை அச்சிறுமிக்கு கொடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.