மேற்கு வங்கம் நோக்கி நகரும் ஃபனி.. கடும் வேகம்.. பிரச்சாரத்தை ரத்து செய்த மமதா.. அவசர ஆலோசனை!
மேற்கு வங்கம் நோக்கி ஃபனி புயல் நகர்ந்து வருவதால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரச்சார பயணங்களையும் ரத்து செய்துவிட்டு தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொல்கத்தா: மேற்கு வங்கம் நோக்கி ஃபனி புயல் நகர்ந்து வருவதால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரச்சார பயணங்களையும் ரத்து செய்துவிட்டு தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மிக மோசமான ஃபனி புயல் தற்போது கரையை கடந்து வருகிறது. ஒடிசா மாநிலம் கோபால்புர் மற்றும் சந்த்பாலி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த புயல் கரையைக் கடக்க தொடங்கி உள்ளது. காலை 8 மணிக்கு இந்த புயல் கரையை கடக்க தொடங்கியது. காலை 11 மணிக்கு முழுமையாக இந்த புயல் கரையை கடக்கும்.
இந்த நிலையில் இந்த புயல் தற்போது மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் மேற்கு வங்கத்தில் பல மாவட்டங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து ஏற்கனவே பல மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
மேற்கு வங்கம் நோக்கி புயல் நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தை தாக்கிய பின் இந்த புயல் வங்கதேசம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஓடிசாவை தாக்கிய ஃபனி.. பெரும்பாலான புயல்கள் கிழக்கு கடலோர பகுதிகளை கட்டம் கட்டுவது ஏன்?
இதனால் அந்நாட்டு அரசும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரச்சார பயணங்களையும் ரத்து செய்தார். தற்போது புயல் தொடர்பாக அங்கு அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அனைத்து பிரச்சார கூட்டங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மக்களை வெளியேற்றுவது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.