மத்திய பாஜக அரசு மீது காங். நம்பிக்கை இல்லா தீர்மானம்- மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ்
மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
Recommended Video
டெல்லி: மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறது. இது தொடர்பாக லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ் அளித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்த மத்திய பாஜக அரசு மீது தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அளித்துள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளது. லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்தநோட்டீஸை அளித்துள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வரும் 27-ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.