ராகுல் எங்கே, எப்போ தான் வருவார்?: குழம்பும் காங்கிரஸ் கட்சியினர்
டெல்லி: 2 வாரம் விடுப்பு எடுத்துச் சென்ற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கு தான் இருக்கிறார் என்பது தெரியாமல் கட்சியினர் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 வாரம் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். அவர் பாங்காங்குக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ராகுல் உத்தரகண்ட் மலைப்பகுதியில் இருப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். ஆனால் ராகுல் உத்தரகண்டில் இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்தது.
இதனால் ராகுல் காந்தி எங்கு தான் சென்றார் என்று தெரியாமல் உள்ளது.
வினோத் மேத்தா
அவுட்லுக் நிறுவனர் வினோத் மேத்தாவின் மறைவுக்கு ராகுல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை அனுப்பியதாக அவர் சார்பில் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டது.
ராகுல்
ராகுல் காந்தி விடுப்பு முடிந்து இன்று டெல்லி திரும்ப வேண்டும். அவர் இன்று வந்துவிடுவார் என்று கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அறிக்கை
ராகுல் வினோத் மேத்தாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் அவர் ஏற்கனவே டெல்லி வந்துவிட்டாரா இல்லை இன்று வர மாட்டாரா என்று காங்கிரஸார் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வர மாட்டார்
இன்னும் சில நாட்களுக்கு ராகுல் காந்தி டெல்லிக்கு திரும்ப மாட்டார் என்று விவரம் அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் வேளையில் ராகுல் விடுப்பில் சென்றுவிட்டார். அவர் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்திருந்தார்.