பேசவிடாமல் இடையூறு... லோக்சபாவில் இருந்து காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு!
விவசாயிகள் பிரச்னை குறித்து பேசவிடாமல் இடையூறு செய்ததைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எம்பிகள் வெளிநடப்பு செய்தனர்.
டெல்லி : விவசாயிகள் பிரச்னை குறித்து பேசவிடாமல் பாஜக உறுப்பினர் குறுக்கிட்டதைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிகள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் இன்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.
அப்போது பாஜக அமைச்சர் அனந்தகுமார் குறுக்கீடுகள் செய்தார். மேலும் தொடர்ந்து மல்லிகார்ஜூனகார்கேவை பேச விடாமல் இடைறுகளை ஏற்படுத்தியதால் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்தனர்.
தலித்துகள் பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதிக்கவில்லை என்று கூறி லோக்சபாவில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.