ஸ்ரீதேவிக்கு நாங்கதான் அவார்ட் கொடுத்தோம்.. காங்கிரஸ் தம்பட்ட டிவிட்டால் சர்ச்சை!
காங்கிரஸ் கட்சி ஸ்ரீதேவியின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்று போட்டு இருக்கிறது.
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஸ்ரீதேவியின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்று போட்டு இருக்கிறது. இது பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.
ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
என்ன எழுதினார்கள்
காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ் டிவிட்டர் பக்கத்தில் ''ஸ்ரீதேவி மறைவில் வருந்துகிறோம். அவர் மிகவும் திறமையான நடிகை. அவர் எப்போதும் நம் இதயங்களில் வாழ்வார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். அவருக்கு 2013ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
|
மோசம்
இதை பலர் கண்டித்து இருந்தார்கள். இவர் ''ஏன் அவர் நேரு பிரதமராக இருந்த போது பிறந்தவர் என்று கூட குறிப்பிடலாமே'' என்று கோவப்பட்டு இருக்கிறார்.
|
ஸ்ரீதேவிக்கு அவமதிப்பு
இவர் ''அன்புள்ள ராகுல் காந்தி, நீங்கள் ஸ்ரீதேவிக்கு கொடுத்த விருது எதோ உதவி போல பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். பத்ம விருதுகள் இந்தியாவால் கொடுக்கப்படுவது, கட்சிகளால் கொடுக்கப்படுவது இல்லை. இந்த டிவிட் மூலம் நீங்கள் ஸ்ரீதேவியை அவமதித்துவிட்டீர்கள்'' என்றுள்ளார்.
நீக்கியது
மேலும் இதோ போல காங்கிரஸ் டிவிட்டிற்கு பெரிய எதிர்ப்பு உருவானது. பலரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்கள். இதையடுத்து அந்த டிவிட் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்டது.