ஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்.. குதிரை பேரத்தை தடுக்க நள்ளிரவில் நடவடிக்கை!
கர்நாடகா காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் சென்றடைந்தனர்.
Recommended Video
ஹைதராபாத்: கர்நாடகா காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் சென்றடைந்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜ 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 78 இடங்களையும் மஜத 37 இடங்களையும் கைப்பற்றின.
104 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும் ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியிருந்தனர்.
ஆட்சியமைத்த பாஜக
ஆனால் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து நேற்று எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.
குதிரை பேரம்
எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர். இதனால், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக வினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் காவல் விலக்கல்
இதனை தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் மாலை மைசூர் சாலையில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் போலீஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர். நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற பின் அங்கு போலீஸ் காவல் விலக்கி கொள்ளப்பட்டது.
ஹைதராபாத்தில் எம்எல்ஏக்கள்
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
காங் எம்எல்ஏக்கள் 3 பேர்
காங்கிரஸ் எம்.எல் ஏக்களில் 3 பேரை தவிர மற்ற 75 எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் சென்றுள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளம் எம்.ஏ.க்கள் 37 பேரும் ஐதராபாத் சென்றடைந்தனர்.