பஞ்சாப் இடைத் தேர்தலில் பட்டையை கிளப்பும் காங்கிரஸ்.. 3 தொகுதிகளில் முன்னிலை!
Recommended Video
அமிருதசரஸ்: பஞ்சாப்பில் நடைபெற்ற 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. எதிலுமே பாஜக முன்னிலை பெற முடியவில்லை.
பஞ்சாப்பில் கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின், ஜலாலாபாத், பக்வாரா, முகேரியான் மற்றும் டாகா ஆகிய 4 தொகுதிகளுக்கு 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், பாஜக நடுவே இங்கு கடும் போட்டி நிலவியது. இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த நிலையில், ஜலாலாபாத், பக்வாரா, முகேரியான் ஆகிய மூன்று இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. டாகாவில் சிரோமணி அகாலிதளம் முன்னிலை வகிக்கிறது.
ஆரம்ப டிரெண்ட்படி, பக்வாரா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பல்விந்தர் சிங் தலிவால், பாஜக வேட்பாளர் ராஜேஷ் பாகாவை விடவும் 1,852 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
முகேரியான் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜங்கி லால் மகாஜன் காங்கிரஸ் வேட்பாளரான இந்து பாலாவுக்கு எதிராக 212 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
டாகா சட்டமன்றத் தொகுதியில், சிரோமணி அகாலிதள வேட்பாளர் மன்பிரீத் சிங் அயலி, காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் சந்துவை விட 759 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஹரியானா... காங்கிரஸ் திடீர் எழுச்சி.. மெஜாரிட்டியை பெற முடியாமல் பாஜக தவிப்பு
ஜலாலாபாத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ரமிந்தர் அவ்லாவைவிட, 5,936 வாக்குகள் வித்தியாசத்தில் சிரோமணி வேட்பாளர், ராஜ் சிங் திபிபுராவை விட முன்னிலையில் உள்ளார்.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே, பஞ்சாபில் நான்கு சட்டமன்ற இடங்களுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. அங்கும், காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.