For Daily Alerts
Just In
தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பென்ட்.. ஆளுநர் உரையின்போது ரகளை செய்ததால் நடவடிக்கை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேப்பரை கிழித்தும் மைக்கை பிடுங்கி எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமளியில் ஈடுபட்ட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெறியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேரை சஸ்பென்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.