தெலுங்கானா விவகாரம்: 6 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட்
டெல்லி: தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் கட்சி எம்.பிகளை தலைவர் சோனியகாந்தி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், ஆந்திராவிலுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் ஒருபிரிவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த சப்பாம் ஹரி, ஜி.வி.ஹர்சகுமார், அருண்குமார், ராஜகோபால், ஆர்.சம்பவசிவ ராவ், ஏ.சாய் பிரதாப் ஆகிய எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்.பி.க்களும் தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.