மாநில கட்சியின் துணையுடனே தேசிய கட்சியை வீழ்த்த முடியும்... கர்நாடகத்தில் அரசியல் பாடம் கற்ற காங்
மாநில கட்சியின் துணையுடன் மட்டுமே தேசிய கட்சியை வீழ்த்த முடியும் என்று கர்நாடக தேர்தல் மூலம் காங்கிரஸ் பாடம் கற்றது.
Recommended Video
பெங்களூர்: மாநில கட்சியின் துணையுடன் மட்டுமே தேசிய கட்சியான பாஜகவை வீழ்த்த முடியும் என்று கர்நாடகா தேர்தல் மூலம் காங்கிரஸ் பாடம் கற்றது.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாக பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டது.
தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரக் கோரி காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் கடுமையாக போராடினர். உச்சநீதிமன்றத்தையும் நாடினர்.
ராஜினாமா
104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக தனக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்று எடியூரப்பா கூறிவிட்டார்.
பாஜகவை தோற்கடித்தது
இதன் மூலம் பாஜக ஆட்சி வருவதை தடுக்க முயற்சித்த காங்கிரஸ் தங்களது முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டதாகவே கருதுகிறது. மேலும் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது.
மற்ற மாநிலங்கள் போல் இல்லை
இந்நிலையில் மேகாலயா, கோவா போல் இல்லாமல் சட்டரீதியாக பாஜகவை காங்கிரஸ் எதிர்கொண்டதாகவே கருதப்படுகிறது. தென் மாநிலங்களில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்ட பாஜக தற்போது அவமானம் அடைந்துள்ளதாக காங்கிரஸார் கருத்து தெரிவிக்கின்றனர்.
அரசியல் பாடம்
இந்த தேர்தல் மூலம் காங்கிரஸ் ஒரு பாடத்தையும் கற்றுக் கொண்டுள்ளது. அதாவது ஒரு மாநிலத்தில் தேசிய கட்சியை வெற்றி கொள்ள மாநில கட்சியுடன் இணைந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதை நிரூபித்துவிட்டது.