வெடித்தது கலகம்- ஜம்முவில் குலாம் நபி ஆசாத் கொடும்பாவி எரித்த காங். தொண்டர்கள்
ஶ்ரீநகர்: காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் எரித்ததால் ஶ்ரீநகரில் பரபரப்பு நிலவியது.
காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து வருகிறார் குலாம்நபி ஆசாத். தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்படாத நிலையில் அந்த கோபத்தை காட்டி வருகிறார் குலாம்நபி ஆசாத்.
அத்துடன் பிரதமர் மோடியை குலாம்நபி ஆசாத் பாராட்டுவதும், குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி பாராட்டுவதும் தொடருகிறது. இதனால் பாஜகவின் தூண்டுதலில் காங்கிரஸில் பிளவை உருவாக்க குலாம்நபி ஆசாத் உடந்தையாக இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
குலாம்நபி ஆசாத், கபில்சிபல்.. செங்குத்து பிளவுக்கு தயாராகிறது காங்.? பலிக்கிறது அமித்ஷா ஆருடம்?
இந்த நிலையில் ஜம்முவில் குலாம்நபி ஆசாத்தின் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் எரித்து போராட்டம் நடத்தினர். பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு செயல்படுகிறார் குலாம்நபி ஆசாத்; மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் பிரசாரத்துக்கு கூட வராதவர் அவர்.. இப்போது கட்சி தலைமைக்கு எதிராக பேசுவதா? என கொந்தளித்தனர் காங்கிரஸ் தொண்டர்கள்.