கொச்சி: கொரோனா பாதித்த ஒருவருக்காக 289 பயணிகளையும் கூண்டோடு இறக்கிவிட்ட துபாய் விமானம்
கொச்சி: துபாய் புறப்பட்ட விமானத்தில் ஒரு இங்கிலாந்து பயணிக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்த நிலையில் அதில் பயணம் செய்த 289 பயணிகளுமே இறக்கிவிடப்பட்ட சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கேரளாவில் அதிக அளவில் கொரோனா தாக்கம் இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கொச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 290 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட விமானம் தயாராக இருந்தது.
விமானம் புறப்படும் நிலையில் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டு அத்தனை பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இங்கிலாந்தில் இருந்து 19 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் கேரளா வருகை தந்தனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே துபாய்க்கு 19 பேரும் புறப்பட்டனர்.
வெறிச்சோடியது புதுச்சேரி சுற்றுலாத் தளங்கள்.. கொரோனா பீதியால் பலருக்கும் பொருளாதார அடி
இதற்காக இன்று காலை துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பேரில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. அவரை பல இடங்களில் தேடி வந்தனர். பின்னர் அவர் துபாய் புறப்ப்படும் விமானத்தில் இருப்பது தெரியவந்தது.
இதனால் விமானம் புறப்படும்போது தடுத்து நிறுத்தப்பட்டது. முதலில் 19 பேரை மட்டும் இறக்கிவிட நினைத்த விமான நிலைய அதிகாரிகள், பின்னர் ஒட்டுமொத்தமாக 289 பேரையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர். பின் அனைவருக்குமே கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன என்றனர். இதனால் கொச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.