For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாமில் கொரோனாவுக்கு முதல் பலி- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்- வடகிழக்கில் முதலாவது உயிரிழப்பு

Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாமில் கொரோனாவுக்கு 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் கொரோனா தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இது.

கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைவாக இருந்து வந்தது.

Coronavirus: 65 year old becomes Northeast’s first death

அஸ்ஸாமில் இதுவரை 29 பேரும் அருணாசல பிரதேசத்தில் ஒருவரும் மணிப்பூர் 2; மிசோரம், திரிபுராவில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேகாலயா, நாகாலாந்தில் கொரோனா தாக்கம் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் அஸ்ஸாமில் 65 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இது.

Recommended Video

    Odisha Lockdown extension | நாட்டிலேயே முதல் மாநிலம்.. லாக்டவுனை நீட்டித்தது ஒடிசா அரசு

    உயிரிழந்த முதியவர் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர். அதற்கு முன்னதாக செளதிக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர். உயிரிழந்த முதியவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Northeast recorded its first death due to coronavirus disease on Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X