கொரோனா தாக்குதல்- ஒடிஷாவில் அரசுடனான யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் மாவோயிஸ்டுகள்
கோராபுட்: கொரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு படையினருடனான யுத்த நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாவோயிஸ்டுகளின் ஒடிஷா பிரிவு அறிவித்துள்ளது.
Recommended Video
சத்தீஸ்கரில் அண்மையில் மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூர தாக்குதலில் 17 பாதுகாப்புப் படையினர் வீர மரணமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நடத்திய தீவிர தாக்குதல்களில் இதுவும் ஒன்று.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் 100க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். சுமார் 4,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 2 வாரங்களாக லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது.
இதனிடையே மாவோயிஸ்டுகளின் எல்லையோரப் பகுதி பிரிவு, பாதுகாப்புப் படையினருடன் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் ஆடியோ பதிவில், யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.
இது தொடர்பாக அரசு தரப்பில் 5 நாட்களில் பதில் தர வேண்டும். மேலும் நாடு முழுவதும் லாக் டவுன் அமலாக்கப்பட்டிருப்பதால் ஆதி பழங்குடி மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.