For Quick Alerts
For Daily Alerts
Just In
காதல் ஜோடியை மரத்தில் கட்டிவைத்து சித்திரவதை - பெண்ணின் தந்தை உட்பட 2 பேர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காதலித்த குற்றத்திற்காக காதல் ஜோடியை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அர்துனா பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான காந்திலால் கதாரா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் காதல் ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி குஜராத்தில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் காதலியின் தந்தை கேட்டுக்கொண்டதையடுத்து காதல் ஜோடியினர் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது காதலியின் தந்தை மற்றும் சிலர், காதல் ஜோடியை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்றினர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
English summary
A couple was tied to a tree as punishment for eloping by the father of the girl upon their return to their village in Banswara district of Rajasthan.
Story first published: Monday, April 18, 2016, 13:16 [IST]