லோக்சபா தேர்தல்- 24 வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி!
டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதலாவது வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் 24 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் 3வது அணியை உருவாக்கியிருக்கின்றன இடதுசாரிகள். இதில் அதிமுக உட்பட 11 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இவற்றுக்கான தொகுதிகள் இன்னமும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி 40 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது. இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே டெல்லியில் இன்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 24 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.