மே.வங்கத்தில் சிபிஎம்-க்கும் அதிர்ச்சி. அமித்ஷா முன்னிலையில் பாஜக ஜோதியில் ஐக்கியமாகும் எம்.எல்.ஏ.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அமித்ஷா முன்னிலையில் தாமும் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தப்சி மோண்டல்.
மேற்கு வங்க சட்டசபைக்கு தமிழகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
பதவியில் இருந்து விலகிய அனைவரும் சனிக்கிழமையன்று மேற்கு வங்கம் வருகை தரும் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைகின்றனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. தப்சி மோண்டலும் தாமும் பாஜகவில் இணையப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தப்சி மோண்டல் கூறியதாவது: சிபிஎம் கட்சியில் இருந்து மனரீதியாக நான் என்னை ஒதுக்கிக் கொண்டேன். மார்க்சிஸ் கட்சியின் இக்கட்டான தருணங்களில் நானும் உடன் இருந்திருக்கிறேன்.
மே.வங்கம்: மேலும் ஒரு திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா -24 மணிநேரத்தில் மமதாவுக்கு 4-வது 'ஷாக்'
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியால் ஏழைகளை சென்றடைய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் கீழ்மட்ட கட்டமைப்பு உருக்குலைந்து போய்விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு மக்கள் பணியாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.
ஆகையால் அமித்ஷா முன்னிலையில் சனிக்கிழமையன்று பாஜகவில் இணைய இருக்கிறேன். இவ்வாறு தப்சி மோண்டல் கூறினார்.