மன்மோகன் ரோபோவை இயக்கும் சோனியா ஒரு ஊழல் அனகோண்டா... சந்திரபாபு நாயுடு
நகரி: காங்கிரஸ் கட்சியின் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போவதைப் பார்க்கும்போது, சோனியாவை ஊழல் அனகோண்டா எனலாம் என குற்றம் சாட்டியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
லோக்சபா தேர்தலையொட்டி நல்கொண்டா மாவட்டத்தில் சுற்றுப்பணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார் சந்திரபாபு நாயுடு. அப்போது பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் பேசியதாவது :-
நான் கொடுத்த கடிதத்தால் தான் தெலுங்கானா உதயமாகி உள்ளது. நான் 9 ஆண்டு முதல்வராக இருந்துள்ளேன். 10 ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளேன். என்னை போன்ற அனுபவம் மிக்க தலைவர் இங்கு யாரும் இல்லை. எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த மாநிலம் நல்ல வளர்ச்சி அடையும். இங்கு பிற்பத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை மாநில முதல்வராக்க திட்டமிட்டு உள்ளேன்.
சோனியா காந்தி ஒரு ஊழல் அனகொண்டா. அவரது அரசின் ஊழல் நீண்டு கொண்டே போகிறது. மன்மோகன் சிங் ரோபோ அவரை இயக்கும் ரிமோட் சோனியா, ராகுல் காந்தி கையில் இருந்தது. ரிமோட்டால் அவரை இயக்கி இயக்கி மன்மோகன் சிங் நடையே ரோபோ போல் ஆகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.