முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை தேடுகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
குடகு: போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக அவரை குடகில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.25 லட்சம் மோசடி செய்துள்ளதாக குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ரூ.1.14 கோடி மோசடி செய்ததாக போக்குவரத்து உதவி மேலாளர் அளித்த புகாரும் செந்தில் பாலாஜி மீது உள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அவர் மற்ற 17 பேருடன் குடகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பண மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குடகு விடுதிக்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் தனிப்படை அமைத்து செந்தில் பாலாஜியை தேடி வருகின்றனர்.