குருநாத் மெய்யப்பனுக்கு எதிராக குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்- கீர்த்தி ஆசாத்
டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், என்.சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் மீது குற்றச் சதி வழக்குப் போடப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கீர்த்தி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் மற்றும் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கியவர் குருநாத் மெய்யப்பன். இவர் சீனிவாசனின் மருமகன் ஆவார். மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் விசாரிக்க நியமிக்கப்பட்ட முத்கல் கமிட்டி தனது முதல் அறிக்கையில், அணி குறித்த தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொண்டதாகவும், பெட்டிங்கில் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறியிருந்தது.
இருப்பினும் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கும், குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இல்லை என்று முத்கல் கமிட்டியின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெய்யப்பன் மீது குற்றச் சதி வழக்குத் தொடர வேண்டும் என்று கீர்த்தி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குருநாத் மெய்யப்பன் மீது 420 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் குற்றச் சதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்