ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக கியூப்பா வழக்கு! நீதிபதிகளை அவதூறாக பேசியதாக மனு தாக்கல்!!
ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக கியூப்பா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை புரட்சியாளர்கள் விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததையடுத்து கியூப்பா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டுப் புரட்சியாளர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்ததாக தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக்கோரி கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு கடந்த 31ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு தடைவிதிக்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக கியூப்பா அமைப்பு இன்று மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டுப் புரட்சியாளர்கள் நீதிபதிகளை அவதூறாக பேசியதாக தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதியை விமர்சித்ததாக கியூப்பா அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு இனி தடை ஏதும் விதிக்கப்பட முடியாது என்ற நிலையில் கியூப்பா அமைப்பு ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.