காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு.. என்கவுடன்ரில் முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டதால் பதற்றம்!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய தீவிரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள தட்சரா கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அப்போது முக்கிய தீவிரவாதியான ஜாகீர் முசாவை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் சரணடைய மறுத்த முசா தொடர்ந்து பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பாதுகாப்பு படையினரும் நடத்திய பதிலடி தாக்குதலில் முக்கிய தீவிரவாதியான ஜாகீர் முசா கொல்லப்பட்டார்.
கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..!
இதைத்தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என கருதி அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் கல்லூரிகள் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி