For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத மத்திய பிரதேச கிராமம்... கடவுளின் சாபம் என மக்கள் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்தில் கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத மத்திய பிரதேச கிராமம்

    போபால்: மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்தில் கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை. அவ்வாறு நடந்தால் குழந்தையோ அல்லது தாயோ மரணமடைவர் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

    ராஜ்கார் மாவட்டத்தில் உள்ளது சங்கா ஷியாம் ஜி கிராமம். இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரசவமே நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவசர காலங்களில் இந்த கிராம எல்லைக்கு வெளியே ஒரு மண்டபத்தில் பிரசவம் நடப்பதாக கூறப்படுகிறது.

    இறப்பு நேரிடும்

    இறப்பு நேரிடும்

    இந்த வினோதமான நடைமுறை குறித்து அந்த ஊர் பெரியவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: கடந்த 400 ஆண்டுகளாக எங்கள் ஊரில் வைத்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்த்தால் குழந்தை ஊனமாகமோ அல்லது குழந்தை அல்லது தாய் இறப்போ நேரிடும் என்பது எங்கள் நம்பிக்கை.

    குழந்தைகள் இறப்பு

    குழந்தைகள் இறப்பு

    16-ஆவது நூற்றாண்டில் எங்கள் கிராமத்தில் ஒரு கோயில் கட்டும் பணிகள் நடந்து வந்தது. அப்போது ஒரு பெண் கோதுமை அரைத்தது அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அந்த கடவுள் சாபமிட்டதாகவும் அது முதல் அங்கு பிறக்கும் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் நம்பப்படுகிறது.

    அவசர காலங்களில்

    அவசர காலங்களில்

    பிரசவம் பார்க்க வேண்டுமானால் கிராம எல்லையில் வைத்து பார்ப்போம். இல்லாவிட்டால் இதற்கென ஒரு தனி அறை கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 90 சதவீத பிரசவம் மருத்துவமனைகளில் நடந்து விடும் அவசர காலங்களில் மட்டும் கிராம எல்லைக்கு வெளியே பார்க்கப்படும்.

    வாய்மொழி

    வாய்மொழி

    கடவுள் சாபம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை. எனினும் எங்கள் மூதாதையர்கள் வாய்மொழியாக சொன்னதுகேற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று அந்த ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    A Sanka Shyam Ji village in Madhya Pradesh has practised a tradition that women are not allowed to deliver newborns inside the village.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X