For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுங்கத்துறை அதிகாரி

Google Oneindia Tamil News

லக்னோ: லக்னோவில் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் வீட்டு பெண் பணியாளரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

போலீஸ் அதிகாரி தினேஷ் யாதவ் இது குறித்துக் கூறுகையில், புகார் வந்துள்ளது. வழக்குப் பதிவு செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது என்றார்.

சம்பந்தப்பட்ட சுங்கத்துறை அதிகாரி சுசில் குமாரின் உறவினரின் இல்லத்தில் பணிபுரிந்து வந்த அப்பெண் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். சுசில் குமார் அப்பெண்ணை 20 நாட்களுக்கு முன்பாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம், தான் கடந்த சில மாதங்களாகவே அவரால் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், பயத்தால்தான் வெளியில் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

"இந்த புகாரின் அடிப்படையில் அப்பெண்ணிடம் மருத்துவ சோதனை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், சுசில் குமார் இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், தன்னுடைய அத்தையை ஒழுங்காக கவனித்துக் கொள்ளாததால்தான் வேலையை விட்டு நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

"என்னுடைய உடல் நலம் சரியில்லாத அத்தையை கவனித்துக் கொள்ளதான் அவரை நியமித்தேன். ஆனால், அவர் சரியாக பணியாற்றாததால் வேலையை விட்டு நிறுத்தினேன். இதனால் கோபத்தில் பொய்ப் புகார் கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கினை விசாரித்துவரும் அதிகாரிகள் இப்புகார் பற்றி எல்லா கோணங்களிலும் விசாரித்து வருவதாக் கூறியுள்ளனர்.

English summary
A customs official was accused of rape by a domestic help in Uttar Pradesh's capital and a case has been registered against him, police said Monday. Police officials, who are investigating the case, said prima-facie it "appeared weak" but added that they would explore all angles before arriving at any conclusion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X