தீவிர புயலாக உருவெடுத்த ஆம்பன்.. ஒடிஷா, மே. வங்கத்தில் 17 பேரிடம் மீட்பு குழுக்கள்
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் வலுவடைந்து தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்துக்கு 17 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
தென்வங்கக் கடலில் மத்திய பகுதியில் ஆம்பன் புயல் மையம் கொண்டிருக்கிறது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 960 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்கத்தின் டிகா துறைமுகத்தின் தெற்கு தென்மேற்கு பகுதியில் 1110 கி.மீ. தொலைவிலும் ஆம்பன் புயல் மையம் கொண்டிருந்தது.
வங்கதேசத்த்ன் கேபுபுரா துறைமுகத்தின் தெற்கு, தென்மேற்கு பகுதியில் 1230 கி.மீ. தொலைவில் இந்த ஆம்பன் புயல் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மிக அதிதீவிர புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.
அதிதீவிரமாக வலுவடையும் இந்த ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து பின் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே மே 20-ந் தேதி கரையை கடக்கும். இதனால் அடுத்த 24 மணிநேர்த்தில் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
Cyclone amphan: வங்கக் கடலில் இன்று தீவிரமாக மாறும் ஆம்பன் புயல்.. தமிழகத்திற்கு என்ன வார்னிங்!
இதனால் வங்க கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒடிஷா, மேற்கு வங்கத்தில் 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் உடனடி நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.